Tuesday, May 02, 2006

அன்புள்ள தங்கைக்கு

நம்ம அம்மா நம்மபளை எப்படி வேலை செய்ய பழக்கினார் என்று ஞாபகம் இருக்கா? நவராதிரி தோவாளி பொங்கல் என்று பண்டிகை நாட்கள் வந்துவிட்டால் ரொம்பவே வேலைகள் வாங்கிவிடுவார். பொதுவாகவே 6 வயது ம்டுஹலே அம்மா எனக்கு சமையல் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விட்டார். பழைய நாட்கள் வழக்கப்படி " அந்த மூன்று நாட்களில்" நான் தான் சமையல் செய்ய வெண்டும். நான் சின்னவளாக இருந்தபோது அம்மா புளிக்காய்ச்சல், தேங்காய்பொடி, பருப்பு பொடி என்று செய்து வைத்திருப்பார். சாதம் மட்டும் பெரிய வென்கலபானையில் கரி அடுப்பில் நேராக வேக வைக்கவேண்டும். காபி பில்டரில் காபி போட் அவேண்டும். 8 - 9 வயதான பிறகு குழம்பு, ரசம் காய் எல்லாம் செய்யக் கற்றுகொடுத்தார். எல்லாமேஎ ஒரு பயத்டில்தான் அக்ற்றுக்கொண்டேன்.
பண்டிகை நாள் வந்துவிட்டால் அம்மாவுடனேயே சமியல அறையில் நிற்க வேண்டும். அம்மா மாவு சலிக்க பேப்பர் கொண்டுவா என்பார். அடுத்ஹ்டது சல்லடையில் சலிக்க வேண்டும். சகக்ரையை கொண்டுவா - பிறகு நெய் கொண்டுவா என்று ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பார். சரி. கொஞ்சம் வெளியில் போய் நிற்கலாம் என்றால் ஏலக்காய் பொடி பண்ணு. முந்திர் பருப்பு சின்னதாக ஒடுத்துக் கொண்டு வா என்பார். ஆக மொத்தம் எல்லா சாமான்களை எடுத்து கொடுத்து ஒத்தாசை பண்னிக்கொண்டே அம்மா பட்சணம் பண்ணும் விதம் மனசில் ரெகார்டு ஆகிவிடும். அதான் அம்மா பட்சணம் செய்தாகிவிட்டதே என்று வெளியே கிளம்பினால் பட்சணங்கள் எடுத்டு வைக்க டப்பாவை துடைத்து எடுத்துவா என்பார். ஆக மொத்தம் அமாதான்மொத்தம் பட்ச்ணம் செய்திருக்கிறார். ஆனால் இபப்டி ரெகார்டு ஆனது கல்யாணம் ஆகி புக்ககம் போகும்போது சௌகரியமாக இருந்தது. என்னுடைய மச்சினர் வந்தபோஹ்டு என் மாமியார் அவருக்கு முதன் முதலாக ஸ்வீட் பண்ணச் சொன்னார். அம்மா பண்ணினதெல்லாம்ஞாபகத்துகு வர, மைதாவும் பாலும் சகக்ரையும் கலந்து கேசரி பவுடர் போட்டு நெய் குத்தி கிளறி அல்வா பண்னிக்கொடுத்தேன். என் மச்சினர் நன்றாக இருக்கிறதென்று இன்னும் கொஞ்சம் கேட்டரே பார்க்கணும்!!